ராஜஸ்தான்: விபத்தில் 2 ராணுவ வீரர்கள் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் சென்ற ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் சென்ற ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள பிகானேர் பகுதியில் ராணுவ வீரர்கள் இருவர் ராணுவ வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நெடுஞ்சாலை வளைவில் டயர் வெடித்துச் சிதறி வாகனம் விபத்துக்குள்ளானது.

இதில் மணிஷ் சிங் செளகான், நீரஜ் சர்மா ஆகிய 2 பேர் ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே ராணுவ வீரர்கள் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர்களை கண்காணித்து வந்த  மருத்துவர் தெரிவித்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com