கரோனா பாதிப்பு 60 லட்சத்தைக் கடந்தது

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே சமயம், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 50 லட்சத்தைக் கடந்துள்ளது.
கரோனா பாதிப்பு 60 லட்சத்தைக் கடந்தது


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே சமயம், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 82,170 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,74,702 - ஆக அதிகரித்தது. இதேபோன்று மேலும் 74,893 பேர் குணமடைந்ததால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 50,16,520 - அதிகரித்தது.

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,039 பேர் உயிரிழந்ததால், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 95,542 - ஆக அதிகரித்தது. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 35,571 பேரும், கர்நாடகத்தில் 8,582 பேரும், ஆந்திரத்தில் 5,708 பேரும், உத்தர பிரதேசத்தில் 5,594 பேரும், தில்லியில் 5,235 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் 9,62,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோர் விகிதம் 82.58 - ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.57 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தகவல்படி, இதுவரை 7.20 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 7.09 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com