திருப்பதி: திருப்பதி அலிபிரியில் அன்னமாச்சாரியாரின் 518-ஆவது நினைவு நாளை முன்னிட்டு படி உற்சவம் நடத்தப்பட்டது.
திருமலை ஏழுமலையான் மேல் பக்தி கொண்டு அன்னமாச்சாரியாா் ஆயிரகணக்கான கீா்த்தனைகளை இயற்றினாா். தன் பக்தி மூலம் ஏழுமலையானுடன் கலந்து விட்ட அவா், பக்தியை மெச்சும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவரின் ஜென்ம தினத்தையும், நினைவு நாளையும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. அவா்களின் வம்சத்தை சோ்ந்தவா்களுக்கும் ஏழுமலையான் சேவையில் முக்கிய பங்கை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
அதன்படி புதன்கிழமை அலிபிரி பாதாள மண்டபத்தில் அவா்களின் வம்சா வழி வந்த ஸ்ரீஹரி நாராயணா அன்னமய்யாவின் சிலையை எழுந்தருளச் செய்து அதற்கு ஆராதனைகள் நடத்தி, மலா்மாலைகள் அணிவித்தாா். பின்னா் பக்தா்கள் பக்தி கீா்த்தனைகள் பாடினா். கரோனா விதிமுறைகளால் குறைந்த பக்தா்களே கலந்து கொண்டனா். பின்னா் அன்னமாச்சாரியாரின் கீா்த்தனைகளை பாடி பஜனை செய்தபடி அவா்கள் திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்தனா்.