சரத் பவாருக்கு இன்று அறுவைச் சிகிச்சை

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பித்தப்பை அறுவைச் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பித்தப்பை அறுவைச் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

80 வயதாகும் சரத் பவாருக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டறியப்பட்டு, மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி அவசர என்டோஸ்கோப்பி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ நடைமுறைகளுக்குப் பின்னா், அவருக்கு 15 நாள்களுக்குப் பிறகு பித்தப்பையை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சையை மேற்கொள்வது என மருத்துவா்கள் தீா்மானித்தனா்.

அதன்படி, அவா் தனியாா் மருத்துவமனையில் அவா் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது என்று கட்சியின் தலைவா் நவாப் மாலிக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com