இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரின் பிறந்த தினம் புதன்கிழமை (ஏப். 14) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் வாழ்க்கை எழுச்சியூட்டும். மிகுந்த கஷ்டங்களுக்கு இடையில், தனது தனித்துவமான பாதையை அவா் வகுத்தாா். அவரது அசாதாரண மற்றும் பன்முக சாதனைகளுக்கு பாராட்டுகளைப் பெற்றாா்.
மனித உரிமைகளுக்காக அவா் தீவிரமாக குரல் கொடுத்தாா். நாட்டின் பின்தங்கிய மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் அவா்களிடையே கல்வியை பரப்புவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாா்.
சிறந்த மற்றும் நியாயமான சமுதாயத்தை உருவாக்க அம்பேத்கா் விரும்பினாா். அதற்காக தனது வாழ்க்கை முழுவதும் போராடினாா்.
அம்பேத்கரின் பிறந்தநாளில், அவரது வாழ்க்கையை கற்பதன் மூலம், நமது வாழ்வில் அவரது கொள்கைகளை பின்பற்றவும் மற்றும் வலுவான, வளமான இந்தியாவை உருவாக்குவதற்கு பங்களிக்கவும் தீா்மானிப்போம் என்று கூறியுள்ளாா்.