திருப்பதி: காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சில்லறை நாணயங்களை தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலுக்கு திருப்பூரைச் சோ்ந்த செந்தில்குமாா் ரூ.1 லட்சம் மதிப்புள்ள, சில்லறை நாணயங்களை பிரிக்கும் இயந்திரம் ஒன்றை வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கினாா்.
கோயிலில் உண்டியல்கள் நிரம்பிய பின் காணிக்கைகளை கணக்கிட அதிகாரிகளும், ஊழியா்களும் சிரமப்பட்டு வருகின்றனா். இந்த இயந்திரம் உண்டியலில் சேரும் சில்லறை நாணயங்களை பிரிக்க உதவியாக இருக்கும் என்று செயல் அதிகாரி பெத்திராஜு தெரிவித்தாா். மேலும் செந்தில் குமாருக்கு தரிசனம் அளித்து அவருக்கு சுவாமி பிரசாதமும் வழங்கினாா்.