முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு ஒத்திவைப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு ஒத்திவைப்பு


புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பை கருத்தில்கொண்டு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, ஏப். 18-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேதி பின்னா் முடிவு செய்யப்படும். நம் இளம் மருத்துவ மாணவா்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

இளநிலை நீட்?: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு ஆக.1-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப நடைமுறைகள் விரைவில் தொடங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்தும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ஜூன் 1 வரை ஒத்திவைத்தும் கடந்த புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com