கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத் இன்று வீடு திரும்பினார்.
ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத்துக்கு கடந்த 9 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் நாகபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தற்போது அவரது உடல்நிலை சீரானதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.
மோகன் பாகவத்தை 5 நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.