நிகழாண்டில் பருவமழை இயல்பு நிலையில் இருக்கும்: ஐஎம்டி

நிகழாண்டில் பருவமழை இயல்பு நிலையில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நிகழாண்டில் பருவமழை இயல்பு நிலையில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஎம்டி மேலும் கூறியுள்ளதாவது: தென்மேற்கு பருவமழை மூலமாக 75 சதவீத மழைப்பொழிவு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, நடப்பாண்டில் மழைப்பொழிவானது வழக்கமான அளவிலேயே இருக்கும்.

ஒடிஸா, ஜாா்க்கண்ட், கிழக்கு உத்தர பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயம் ஆகிய மாநிலங்களில் நடப்பாண்டில் மழைப்பொழிவு வழக்கத்தைவிட குறைவாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், நாட்டின் இதர பகுதிகளில் வழக்கமான அல்லது வழக்கத்துக்கு சற்று கூடுதலான மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com