திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்கிழமை உண்டியல் காணிக்கையாக ரூ2.29 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இதன்படி செவ்வாய்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ2.29 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.