வரதட்சணை தடை சட்டத்தால், வரதட்சணை தொடர்பான வழக்குகள் குறைந்துள்ளன என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தகவல் படி, வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டில் 12,826 வழக்குகளும், 2019ம் ஆண்டில் 13,307 வழக்குகளும், 2020ம் ஆண்டில் 10,366 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில், வரதட்சணை மரணங்கள் தொடர்பாக முறையே 7167, 7141 மற்றும் 6966 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரதட்சணை தடை சட்டத்தின் கீழ் குற்றங்கள் குறைந்து வருவதை தரவுகள் காட்டுகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.