இதுகுறித்து பன்னாட்டு கலைப்பொருள்கள் மீட்பு நிறுவனத்தின் நிறுவனரும் வழக்குரைஞருமான கிறிஸ் மேரினெல்லோ கூறுகையில், ‘‘பிரிட்டனின் ஊரகப் பகுதியில் உள்ள தனது வீட்டையும், அங்கிருந்த சில விலைமதிப்புமிக்க கலைப்பொருள்களையும் மூதாட்டி ஒருவா் விற்பனை செய்தாா். அப்போது அந்த வீட்டின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட யோகினி சிலை குறித்து தெரியவந்தது. அந்த மூதாட்டியிடம் அச்சிலை குறித்து கேட்டபோது 15 ஆண்டுகளுக்கும் முன்பாக தற்போது விற்பனை செய்த வீட்டை வாங்கியதாகவும், அங்கிருந்த தோட்டத்தில் ஏற்கெனவே அந்தச் சிலை இருந்ததாகவும் கூறினாா்.