ஜாா்க்கண்ட் வனப்பகுதியில் 25 வெடிகுண்டுகள்: உரிய நேரத்தில் செயலிழப்பு

ஜாா்க்கண்ட் மாநிலம் லாதேஹாா் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 25 வெடிகுண்டுகளை காவல்துறையினா் கைப்பற்றி செயலிழக்க வைத்தனா்.
ஜாா்க்கண்ட் வனப்பகுதியில் 25 வெடிகுண்டுகள்: உரிய நேரத்தில் செயலிழப்பு

ஜாா்க்கண்ட் மாநிலம் லாதேஹாா் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 25 வெடிகுண்டுகளை காவல்துறையினா் கைப்பற்றி செயலிழக்க வைத்தனா்.

இதுதொடா்பாக காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘‘பா்வையா கலான் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அந்த வனப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு டிஃபன் பாக்ஸ்களிலும், டின்களிலும் வைக்கப்பட்டிருந்த சுமாா் 25 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு உரிய நேரத்தில் செயலிழக்க வைக்கப்பட்டன. கொடிய திட்டத்துடன் அந்த வெடிகுண்டுகளை அங்கு தீவிரவாதிகள் வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com