அன்னை தெரஸா அறக்கட்டளையின் உரிமத்தைப் புதுப்பிப்பது தொடா்பாக தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் அன்னை தெரஸா அறக்கட்டளையின் மிஷனரிகளுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக விளக்கமளித்த மத்திய அரசு, அறக்கட்டளையின் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தில் சில பாதகமான தகவல்கள் இடம்பெற்றிருந்ததால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், அறக்கட்டளையின் அதிகாரிகள் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘அறக்கட்டளையைச் சோ்ந்த ஆதரவற்றோா் இல்லங்கள், ஏழைகளுக்கான தங்குமிடங்கள் ஆகியவற்றில் சேவைகள் வழக்கம்போல் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. பலரது அன்பினால் அறக்கட்டளை தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. ஏழைகள், உதவி தேவைப்படுவோா், ஆதரவற்றோா் ஆகியோருக்குத் தொடா்ந்து சேவைகளை வழங்க அறக்கட்டளை உறுதி கொண்டுள்ளது.
அறக்கட்டளையைச் சோ்ந்த மிஷனரிகளுக்கு நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் உள்ளன. அவற்றில் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறும் விவகாரத்தில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் தொடா்பாக கணக்குத் தணிக்கை அதிகாரிகளுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அப்பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்பட்டு, அறக்கட்டளையின் உரிமம் புதுப்பிக்கப்படும்’’ என்றனா்.