கேரளம்: சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை

கேரள மாநிலம் மலப்புரத்தில் 14 வயது சிறுமியை போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரைக் கைது செய்துள்ள போலீஸார்

மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் 14 வயது சிறுமியை போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரைக் கைது செய்துள்ள போலீஸார், மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுமி தனது தாய், சகோதரர், தாத்தா - பாட்டியுடன் வசித்து வருகிறார். இவரது தந்தை வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரின் செல்லிடப்பேசி மூலம் கடந்த 8 மாதங்களாக இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழகியவர்களும், அவரது உறவினர் ஒருவரும் என மொத்தம் 7 பேர் இந்த சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இவர்களில் இருவர் அந்த சிறுமிக்கு போதைப்பொருளையும் கொடுத்து துன்புறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நலக் அமைப்புக்கு புகார் கிடைத்ததன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்திருப்பதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 19 வயது முதல் 24 வயதுக்குள்பட்டவர்கள் எனவும் இவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத இன்ஸ்டாகிராம் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.

கைதான 2 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376, போக்úஸா சட்டம், சிறார் சட்டப் பிரிவு 77 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றவர்கள் குறித்து விசாரித்து வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com