ஜி.எஸ்.டி. வரி வசூலில் புதிய உச்சம்

ஜி.எஸ்.டி. வசூலில் புதிய உச்சமாக டிசம்பர் மாதத்தில் ரூ. 1,15,174 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 
ஜி.எஸ்.டி வரி வசூலில் புதிய உச்சம்
ஜி.எஸ்.டி வரி வசூலில் புதிய உச்சம்
Updated on
1 min read

ஜி.எஸ்.டி. வசூலில் புதிய உச்சமாக டிசம்பர் மாதத்தில் ரூ. 1,15,174 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ. 1,13,866 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியதே உச்சமாக இருந்த நிலையில், தற்போது அதை விட 12 சதவிகிதம் கூடுதலாக ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது.

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொருள்களுக்கு நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், ஜி.எஸ்.டி. வரி வசூல் குறைந்தது. எனினும் தளர்வுகள் படிப்படியாக அளிக்கப்பட்டதன் விளைவாக கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 86,449 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியது.

இதனிடையே தற்போது டிசம்பர் மாதத்திற்கு ரூ. 1,15,174 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ. 1,13,866 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியதே உச்சமாக இருந்த நிலையில், தற்போது அதை விட 12 சதவிகிதம் கூடுதலாக ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com