கரோனா தடுப்பூசி தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
கரோனா தடுப்பூசி முழு பாதிகாப்பானது என்று வல்லுநர்கள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது.
கரோனா தடுப்பு மருந்து குறித்து பேசிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ''உலகில் மிகப்பெரிய கரோனா தடுப்பு மருந்து நிகழ்வு நாட்டில் தொடங்கியுள்ளது. இதனால் கரோனா தடுப்பு மருந்து குறித்த வந்தந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தில்லியில் 81 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவரளுடன் உரையாடினேன். அதில் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. கரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் வெற்றியடைவார்கள்'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தென்காசி தொகுதியில் திமுக, அதிமுக, தவெக உள்பட 27 வேட்புமனுக்கள் ஏற்பு

சீனாவில் எரிபொருள் விலையுயா்வு; இலங்கையில் மானியம் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானில் இயற்கை சீற்றம்: ஒரே நாளில் 22 போ் உயிரிழப்பு
குமரி மாவட்டத்தில் 90 மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


