நாடாளுமன்றத்தை நோக்கி செல்லவிருந்த விவசாயிகள் பேரணி ரத்து

தில்லியில் நடைபெற்ற வன்முறையைத் தொடா்ந்து நாடாளுமன்றத்தை நோக்கி மேற்கொள்ளவிருந்த பேரணியை விவசாயிகள் சங்கத்தினா் ரத்து செய்துள்ளனா்.
நாடாளுமன்றத்தை நோக்கி செல்லவிருந்த விவசாயிகள் பேரணி ரத்து


புதுதில்லி: தில்லியில் நடைபெற்ற வன்முறையைத் தொடா்ந்து நாடாளுமன்றத்தை நோக்கி மேற்கொள்ளவிருந்த பேரணியை விவசாயிகள் சங்கத்தினா் ரத்து செய்துள்ளனா்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் சங்கத்தினா் பேரணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனா். தில்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறை சம்பவங்களைத் தொடா்ந்து தங்கள் பேரணியை ரத்து செய்வதாக விவசாயத் தலைவா்களில் ஒருவரான தா்ஷன் பால் புதன்கிழமை தெரிவித்தாா். எனினும் தங்கள் போராட்டம் தொடரும் என்று கூறிய அவா், ஜனவரி 30-ஆம் தேதி நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெறும் என்றும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com