உயிரைக் காக்க நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு கணத்திற்கும் நன்றி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் புகழ்மிக்க மருத்துவரான டாக்டர் பிதான் சந்திர ராயின் (ஜூலை 1, 1882- ஜூலை 1, 1962) நினைவாக அவரது பிறந்த நாள் தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மருத்துவர்களின் சேவையை பலரும் பாராட்டி வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,
மக்களின் உயிரைக் காக்க நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு கணத்திற்கும் நன்றி. உங்களுக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.