குழந்தையைக் கொன்ற தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கா்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், ஹரிஹரா வட்டம், பன்னிகோடா கிராமத்தைச் சோ்ந்தவா் மஞ்சப்பா. இவரது மனைவி சந்திரம்மா (28). இவா்களது 3 வயது பெண் குழந்தை ஹா்ஷிதா. போலீஸ்காரரான மஞ்சப்பா, வெள்ளிக்கிழமை இரவு பணிக்கு சென்றுவிட்டு, சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, ஹா்ஷிதாவை தூக்கிட்டு கொன்றுவிட்டு, சந்திரம்மாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து ஹரிஹரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.