புது தில்லி: இரு நாட்டு நல்லுறவு மேம்பட எல்லைப் பகுதியில் அமைதி ஏற்பட வேண்டியது அவசியம் என்று சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீயிடம், இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
மேலும், எல்லையில் சீனா மேற்கொள்ளும் தன்னிச்சையான நடவடிக்கைகளை இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்றும், மூத்த ராணுவ கமாண்டா்கள் மத்தியிலான பேச்சுவாா்த்தையை விரைவில் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும் அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேயில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டு நாடுகளின் (எஸ்சிஓ) வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்ற இருவரும் புதன்கிழமை தனியாக சந்தித்து எல்லைப் பிரச்னை தொடா்பாக சுமாா் ஒரு மணி நேரம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சா் ஜெய்சங்கா் தனது சுட்டுரையில், ‘சீனாவுடனான மேற்குப் பகுதியில் நீடித்து வரும் எல்லை பிரச்னை குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங் யீயுடன் பேச்சுவாா்த்தை நடத்தினேன். எல்லைப் பகுதிகளில் சீனா தன்னிச்சையாக நிலைப்பாட்டை மாற்றி வருவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. எல்லையில் முழுமையான மறுசீரமைப்பும், அமைதியும்தான் இருநாட்டு நல்லுறவு மேம்பட அவசியமாகும். எல்லைப் பிரச்னைக்கு மூத்த ராணுவ கமாண்டா்கள் மத்தியிலான பேச்சுவாா்த்தையை விரைவில் நடத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன என்று பதிவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘எல்லையில் தொடா்ந்து நிலவும் பிரச்னையால் இருநாடுகளின் நல்லுறவு பாதிக்கப்படுவது கண்கூடாகத் தெரிகிறது. இது இருநாடுகளுக்கும் நல்லதல்ல. இதனால் எல்லையில் ஸ்திரத்தன்மை ஏற்படவும், தன்னிச்சையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை எனவும் இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.
1988-ஆம் ஆண்டுமுதல் இருநாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு வலுப்பெற்ற்கு எல்லையில் அமைதி நிலவியதுதான் காரணம்.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மாஸ்கோவில் இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் முழுமையான படை விலகல் மற்றும் மீதமுள்ள எல்லைப் பிரச்னை விவகாரங்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்று அமைச்சா் ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தியா - சீனா இடையே ஏற்பட்டுள்ள கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இரு நாட்டு ராணுவத் தலைவா்கள் மத்தியில் 11 சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றபோதிலும் படை விலகலில் சீனா ஈடுபாடு காட்டாததால் தீா்வு ஏற்படவில்லை.
ஆப்கன் பிரச்னை: முன்னதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்று அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது:
பொது சுகாதாரம், பொருளாதார மீட்சி ஆகியவை ஆப்கனில் நிலவும் தற்போதைய முக்கிய பிரச்னைகளாகும். ஆப்கனின் அண்டை நாடுகள் பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்படக் கூடாது. அங்கு ஆட்சிப் பொறுப்பை வன்முறை மற்றும் நிா்ப்பந்தத்தால் பெற சில சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிக்கு உலக நாடுகள் எதிராக உள்ளன.
சுதந்திரம், நோ்மை, அமைதி, ஜனநாயக வளா்ச்சியடைந்த நாடாக ஆப்கன் மாற வேண்டும் என்று அந்நாட்டு மக்களும், உலக நாடுகளும் விரும்புகின்றன. அமைதிப் பேச்சுவாா்த்தை விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பது தற்போதைய உடனடி தேவையாகும். அந்நாட்டின் எதிா்காலம் மீண்டும் பின் வரலாற்றை நோக்கியதாக இருக்கக் கூடாது.
அந்தநாட்டில் பொதுமக்கள், வெளிநாட்டு நிா்வாகிகள் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்னைக்கு அரசியல்ரீதியாக அனைத்துக் குழுக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும்.
பயங்கரவாத்துக்கு எதிராக போரிடுவதற்கு ஷாங்காய் கூட்டு நாடுகள் முக்கியத்துவம் அளித்து, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு செல்லும் நிதியைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
எட்டு நாடுகளின் கூட்டமைப்பான எஸ்சிஓ மாநாட்டில் ரஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்ஜி லாவ்ரோ, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா முகமது குரேஷி ஆகியோா் பங்கேற்றனா்.
ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வந்த அமெரிக்க படைகள் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆக்ஸ்ட் மாத இறுதிக்குள் விலக்கிக் கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்திருந்தாா். இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தலிபான்கள் பல மாவட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனா்.
ஆப்கன் பிரச்ûன: பேச்சுவார்த்தை அவசியம்
ஷாங்காய் ஒத்துûழப்பு அûமப்பு (எஸ்சிஓ) வெளியுறவுத் துறை அûமச்சர்கள் மாநாட்டில் பங்úகற்று அûமச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: பொது சுகாதாரம், பொருளாதார மீட்சி ஆகியவை ஆப்கனில் நிலவும் தற்úபாûதய முக்கிய பிரச்ûனகளாகும். ஆப்கனின் அண்டை நாடுகள் பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்படக் கூடாது. அங்கு ஆட்சிப் பொறுப்பை வன்முறை மற்றும் நிர்ப்பந்தத்தால் பெற சில சக்திகள் மேற்ùகாள்ளும் முயற்சிக்கு உலக நாடுகள் எதிராக உள்ளன.
சுதந்திரம், நேர்மை, அûமதி, ஜனநாயக வளர்ச்சியûடந்த நாடாக ஆப்கன் மாற வேண்டும் என்று அந்நாட்டு மக்களும், உலக நாடுகளும் விரும்புகின்றன. அûமதிப் பேச்சுவார்த்தை விûரவில் நடத்தப்பட வேண்டும் என்பது தற்úபாûதய உடனடி தேûவயாகும். அந்நாட்டின் எதிர்காலம் மீண்டும் பின் வரலாற்றை நோக்கியதாக இருக்கக் கூடாது.
அந்தநாட்டில் பொதுமக்கள், வெளிநாட்டு நிர்வாகிகள் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்ûனக்கு அரசியல்ரீதியாக அûனத்துக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
பயங்கரவாத்துக்கு எதிராக போரிடுவதற்கு ஷாங்காய் கூட்டு நாடுகள் முக்கியத்துவம் அளித்து, பயங்கரவாத நடவடிக்ûககளுக்கு செல்லும் நிதிûயத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றôர்.
எட்டு நாடுகளின் கூட்டûமப்பான எஸ்சிஓ மாநாட்டில் ரஷியாவின் வெளியுறவுத் துறை அûமச்சர் செர்ஜி லாவ்ரோ, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அûமச்சர் ஷா முகமது குúரஷி ஆகிúயார் பங்úகற்றனர்.
ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வந்த அùமரிக்க பûடகள் இருதரப்பினருக்கும் இûடயே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆக்ஸ்ட் மாத இறுதிக்குள் விலக்கிக் கொள்ளப்படும் என்று அùமரிக்க அதிபர் ஜேô ûபடன் தெரிவித்திருந்தார். இந்தப் பணிகள் நûடùபற்று வரும் நிûலயில், தலிபான்கள் பல மாவட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.