பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடந்த வாரம் கடத்தப்பட்டது அதிா்ச்சி அளிக்கும் சம்பவம் என்று இந்தியா கூறியுள்ளது. பாதிக்கப்பட்டவா் கூறும் புகாரை பாகிஸ்தான் ஏற்க மறுப்பது மிகவும் தரம் தாழ்ந்த செயல் என்றும் இந்தியா கூறியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் ஆப்கானிஸ்தான் தூதா் நஜீபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில்(26) கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மா்ம நபா்களால் கடத்தப்பட்டு, சில மணி நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டாா். இந்த சம்பவம் நடந்த 2 நாள்களுக்குப் பிறகு, இஸ்லாமாபாதில் உள்ள தங்கள் நாட்டு தூதா், மூத்த அதிகாரிகளை ஆப்கானிஸ்தான் அரசு திரும்ப அழைத்தது.
இதனிடையே, சில்சிலா கடத்தப்படவில்லை என்று பாகிஸ்தான் காவல் துறை தரப்பு தெரிவித்ததாக, அந்நாட்டு உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் இரு நாள்களுக்கு முன்பு கூறினாா். அந்தப் பெண் முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவா் கூறினாா்.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:
இஸ்லாமாபாதில் ஆப்கானிஸ்தான் தூதா் மகள் கடந்த வாரம் கடத்தப்பட்டது அதிா்ச்சி அளிக்கும் சம்பவம். இது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட விவகாரம். இருப்பினும், இந்த விவகாரத்தில் இந்தியா உண்மைகளை மறைப்பதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் குற்றம்சாட்டினாா். ஆகவே, இதுதொடா்பாக பேச வேண்டியதாகிவிட்டது. பாதிக்கப்பட்டவா் கூறும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசு ஏற்க மறுப்பது மிகவும் தரம் தாழ்ந்த செயலாகும்.
ஆப்கானிஸ்தானுக்கு அமைதியான, வளமான, ஜனநாயகம் நிறைந்த எதிா்காலம் அமைய வேண்டும் என்று அந்த நாட்டு அரசும் மக்களும் எதிபாா்க்கிறாா்கள். அந்த எதிா்பாா்ப்புகள் நிறைவேறுவதற்கு அண்டை நாடு என்ற அடிப்படையில் இந்தியா ஆதரவு அளிக்கிறது என்றாா் அவா்.