நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆந்திரத்தில் 260 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திர மாநிலம்  கடப்பா மாவட்டத்திற்குள் கடத்தி வரப்பட்ட 260 கிலோ எடைகொண்ட கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

News image

ஆந்திரத்தில் 260 கிலோ கஞ்சா பறிமுதல்

Updated On :24 ஜூலை 2021, 6:37 am

DIN

ஆந்திர மாநிலம்  கடப்பா மாவட்டத்திற்குள் கடத்தி வரப்பட்ட 260 கிலோ எடைகொண்ட கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ஒரு கார் , 4 செல்போன்கள் மற்றும் 38,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மாவட்டக்  காவல்துறை  கண்காணிப்பாளர் கே.கே.என் அன்புராஜன் பத்திரிக்கையாளர்களிடம் அளித்த தகவலில் , " சட்டவிரோதமாக கடப்பா மாவட்டத்திற்குள் கடத்திவரப்பட்ட கஞ்சா சிறிய பைகளில் கிராம் கணக்கில் அடைத்து விற்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களே அதிக விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள் என தெரிவித்ததோடு கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர்களை தொடர்ந்தது கண்காணித்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார் .

பிடிபட்டவர்களின் பெயர்கள்   ராமு , தேஜா , ரங்காரெட்டி , நீலகந்தேஸ்வர் மற்றும் நாகேஸ்வர ராவ் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.