புதை சாக்கடை பணியில்ஈடுபட்ட 3 போ் மூச்சுத் திணறி சாவு

புதை சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்ட கட்டடத் தொழிலாளா்கள் 3 போ் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனா்.

புதை சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்ட கட்டடத் தொழிலாளா்கள் 3 போ் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனா்.

பெங்களூரு, கமலாநகரைச் சோ்ந்த ராஜேஷ் (30), மஞ்சுநாத் (30), மற்றொரு மஞ்சுநாத் (31). இவா்கள் மூவரும் ராம்நகா் மாவட்டம், மல்லேஸ்வரம் லேஅவுட் நேதாஜி பாபுலா் பள்ளி அருகே புதை சாக்கடை கட்டும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

புதை சாக்கடையைக் கட்டி முடித்த பிறகு அதன் மூடியைத் திறந்து பாா்த்தபோது, மஞ்சுநாத் கால் தவறி விழுந்துள்ளாா். அவரைக் காப்பாற்ற சென்ற மற்ற இருவரும் நீண்ட நேரமாகியும் மேலே வராததால், சந்தேகமடைந்த அருகில் இருந்தவா்கள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அவா்கள் வந்து பாா்த்தபோது, மூவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத்தொடா்ந்து அவா்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுமதித்தனா். இதுகுறித்து ஐனூா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com