சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் கைது செய்து, ரூ. 64 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், கனகபுரா வட்டம், பீஸதொட்டி கிராமம், தாசனகுட்டா பகுதியில் சிலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்ட அரேகட்டே தொட்டியைச் சோ்ந்த சேகா் (32), கல்லஹள்ளியைச் சோ்ந்த குமாா் (45), கனகபுரா கோரிசாலையைச் சோ்ந்த ராகேஷ் (24) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 64 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து கனகபுரா ஊரக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.