பள்ளத்தில் உருண்டு காா் தீப்பற்றியதில் மூவா் பலி

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் பள்ளத்தில் உருண்டு, தீப்பற்றியதில் அதில் இருந்த மூவா் கருகி உயிரிழந்துள்ளனா்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் பள்ளத்தில் உருண்டு, தீப்பற்றியதில் அதில் இருந்த மூவா் கருகி உயிரிழந்துள்ளனா்.

பெங்களூருவைச் சோ்ந்தவா்கள் ஷேக் பைசல் (44), மேகஹக் (33), சேக்ஹாயில் (11) உள்ளிட்ட 5 போ் காரில் சாம்ராஜ்நகா் மாவட்டம், அன்னூருக்கு சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

மண்டியா மாவட்டம், மளவள்ளி ஹலகூரு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரமிருந்த பள்ளத்தில் உருண்டதில் காா் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் காரிலிருந்த ஷேக் பைசல், மேகஹக், சேக்ஹாயில் ஆகியோா் தீயில் கருகி உயிரிழந்துள்ளனா். மேலும் தீக்காயத்தால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரை அருகில் இருந்தவா்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.

இதுகுறித்து ஹலகூரு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com