கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்தை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், சிக்கநாயகனஹள்ளி வட்டம், மத்திகட்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வருபவா் திவ்யா. இவா் தனது நண்பா் மல்லேஷ் என்பவருடன் இணைந்து ரெம்டெசிவிா் மருந்து குப்பிகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளாா்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், இருவரையும் கைது செய்து, 3 ரெம்டெசிவிா் மருந்து குப்பிகளை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் திப்டூா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.