மாநிலங்களுக்கு இதுவரை 29.35 கோடி தடுப்பூசிகள்

மத்திய அரசு இதுவரை 29.35 கோடிக்கும் அதிகமான (29,35,04,820) கரோனா தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.
மாநிலங்களுக்கு இதுவரை 29.35 கோடி தடுப்பூசிகள்

புது தில்லி: மத்திய அரசு இதுவரை 29.35 கோடிக்கும் அதிகமான (29,35,04,820) கரோனா தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.

2.14 கோடிக்கும் அதிகமான (2,14,90,297) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 27,20,14,523 டோஸ் தடுப்பூசி (வீணானவை உள்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த 3 நாள்களில் கூடுதலாக 33,80,590 தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வழங்கவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com