மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கே.கே.வேணுகோபால் கடந்த ஜூலை 1, 2017 அன்று நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டுடன் முடிவடைந்ததையடுத்து, 2021 ஆம் ஆண்டு ஜூலை 1 வரை ஓராண்டுக்கு அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.
இந்நிலையில் வருகிற ஜூலை 1, 2021 உடன் ஓராண்டு பதவி நீட்டிப்பு முடிவடையும் நிலையில் மேலும் ஓராண்டுக்கு கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
கே.கே.வேணுகோபால், மத்தியில் மொரார்ஜி தேசாய் அரசின்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார். பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.