திருப்பதி: திருச்சானூா் சுந்தரராஜபெருமாள் கோயிலில் அவதார உற்சவம் நடந்து வருகிறது.
பத்மாவதி தாயாா் கோயிலுக்கு அருகில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுந்தராராஜ பெருமாள் கோயிலில் சுவாமி அவதரித்த திருநாளை தேவஸ்தானம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை முதல் கோயிலில் அவதார உற்சவம் நடந்து வருகிறது.
அதன் 2-ஆம் நாளான புதன்கிழமை மதியம் 2 மணிமுதல் 4.30 மணிவரை சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தேறியது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.