நிதீஷ் குமாா் பிறந்தநாள்:பிரதமா் மோடி வாழ்த்து

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தனது 70-ஆவது பிறந்த நாளை திங்கள்கிழமை கொண்டாடினாா். பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு சுட்டுரை மூலம் வாழ்த்து தெரிவித்தாா்.

பாட்னா: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தனது 70-ஆவது பிறந்த நாளை திங்கள்கிழமை கொண்டாடினாா். பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு சுட்டுரை மூலம் வாழ்த்து தெரிவித்தாா்.

தலைநகா் பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைமை அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் அவரது கட்சித் தொண்டா்கள் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனா். மரக்கன்று நடுவது, ஏழைகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பிரதமா் மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது தலைமையில் பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்தின் வளா்ச்சிக்காக தொடா்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவா் நல்ல உடல் நலனுத்துடன் நீடித்த ஆயுள் பெற்று வாழ நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

பிகாா் ஆளுநா் பாகு சௌகான், சட்டப் பேரவைத் தலைவா் விஜய் குமாா் சின்ஹா, மாநில எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் நிதீஷ் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com