மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தில்லியிலுள்ள ராம் மனோகர் லால் மருத்துவமனையில் முதல்கட்ட தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கரோனா முன்களப் பணியாளர்களான சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று (மார்ச் 6) மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதல்கட்ட கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
தில்லியிலுள்ள ராம் மனோகர் லால் மருத்துவமனை சுகாதார ஊழியர்கள் தோமருக்கு தடுப்பூசி செலுத்தினர்.
இதேபோன்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, சதானந்த கெளடா, தலாய் லாமா உள்ளிட்டோருக்கும் இன்று முதல்கட்ட கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் கவலையா? அதிரடி விலை குறைப்பு! ரூ. 60,000க்கு ஓலா மின்சார பைக்!
கேரளத்தில் பேசிய கார்கே! குஜராத்தில் வலுக்கும் எதிர்ப்பு! என்ன பேசினார்?

தேவ்தத் படிக்கல் தொடர்ந்து இப்படியே விளையாடினால்... என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்?
இரண்டு வானம் வெளியீடு எப்போது?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


