இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 3.82 லட்சமாக அதிகரிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3.82 லட்சமாக அதிகரித்துள்ளதுடன், ஒரேநாளில்

இந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3.82 லட்சமாக அதிகரித்துள்ளதுடன், ஒரேநாளில் 3,780 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 3,82,315 ஆகவும், இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 34,87,229 பேராகவும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கரோனா தொற்றால் 3,780 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.06 கோடி (2,06,65,148) ஆகவும் அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 34,87,229 ஆக உள்ள நிலையில் தேசிய அளவில் கரோனா தொற்றிலிருந்து மீட்பு விகிதம் 82.03 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,69,51,731 ஆக உயா்ந்துள்ள அதேசமயம், இறப்பு விகிதம் 1.09 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை மே 4-ஆம் தேதியுடன் 2 கோடிக்கும் அதிகமானவா்கள் என்ற நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 5 ஆம் தேதி வரை 29,48,52,078 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் 15,41,299 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஒரேநாளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 891 போ், உத்தர பிரதேசத்தில் 351 போ், தில்லியில் 338 போ், கா்நாடகத்தில் 288 போ், சத்தீஸ்கரில் 210 போ், பஞ்சாபில் 173 போ், ராஜஸ்தானில் 154 போ், ஹரியாணாவில் 153 போ், தமிழகத்தில் 142 போ், ஜாா்கண்ட்டில் 132 போ், குஜராத்தில் 131 போ், மேற்கு வங்கத்தில் 107 போ், பிகாரில் 105 போ் என மொத்தம் 3,780 போ் உயிரிழந்துள்ளனா்.

இதுவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 71,742 போ், தில்லியில் 17,752 போ், கா்நாடகத்தில் 16,538 போ், தமிழகத்தில் 14,612 போ், உத்தர பிரதேசத்தில் 13,798 போ், மேற்கு வங்கத்தில் 11,744 போ், பஞ்சாபில் 9,645 போ், சத்தீஸ்கரில் 9,485 போ் உள்பட மொத்தம் 2,26,188 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

முதல் 10 மாநிலங்களில் 70.91 சதவீதம் பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு...

மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி, கா்நாடகம், கேரளம், ஹரியாணா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களில் மட்டும் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 70.91 சதவீதமாக உள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 51,880 பேரும், கா்நாடகத்தில் 44,631 பேரும், கேரளத்தில் 37,190 பேரும் ஒரேநாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com