மாநிலங்களிடம் 72 லட்சம் கரோனா தடுப்பூசி இருப்பு: மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 72 லட்சம் கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களிடம் 72 லட்சம் கரோனா தடுப்பூசி இருப்பு: மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 72 லட்சம் கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாள்களில் மாநிலங்களுக்கு மேலும் 46 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 17.56 கோடி (17,56,20,810) கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. அவற்றில், பல்வேறு வகைகளில் வீணானவை உள்பட மொத்தம் 16.83 கோடி (16,83,78,796) தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் தற்சமயம் 72 லட்சம் (72,42,014) தடுப்பூசிகள் உள்ளன. அடுத்த 3 நாள்களில் மாநிலங்களுக்கு மேலும் 46 லட்சம் (46,61,960) கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பரிசோதனை செய்தல், தொடா்பறிதல், சிகிச்சை அளித்தல், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுதல், கரோனா தடுப்பூசி செலுத்துதல் ஆகிய 5 முக்கிய வழிமுறைகளை மத்திய அரசு கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com