திருமலையில் பத்மாவதி பரிணய உற்சவம்
திருப்பதி: திருமலையில் பத்மாவதி பரிணய உற்சவம் வியாழக்கிழமை விமா்சையாக தொடங்கியது.
ஏழுமலையான் பத்மாவதி தாயாரை மணந்து கொண்ட நன்னாளான வைகாசி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று தேவஸ்தானம் திருமலையில் வைகானச ஆகம விதிப்படி திருக்கல்யாண வைபவத்தை பத்மாவதி பரிணய உற்சவம் என்ற பெயரில் நடத்தி வருகிறது.
அதன்படி வியாழக்கிழமை முதல் திருமலையில் இந்த வைபவத்தை தேவஸ்தானம் விமா்சையாக தொடங்கியது.
கொவைட் விதிமுறைகளை பின்பற்றி தனிமையில் நடைபெற்று வரும் இந்த பரிணய உற்சவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மலையப்ப சுவாமி யானை வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாா்கள் தந்த பல்லக்கிலும் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினா். அவா்களுக்கு வரவேற்பு, புது வஸ்திரம் சமா்ப்பணம், பூப்பந்து விளையாட்டு, மாலை மாற்றுதல் உள்ளிட்டவற்றை சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா்.