இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 9.42% ஆகக் குறைவு

கரோனா உறுதி செய்யப்படுவோரின் விகிதம் 9.42 சதவீதமாக குறைந்துள்ளது.

News image
Updated On :26 மே 2021, 6:03 am

ANI


புது தில்லி: நாட்டில் கரோனா பரவலின் தீவிரம் குறைந்து வருகிறது. தொடர்ந்து 13வது நாளாக புதிய பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே வேளையில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் விகிதம் 9.42 சதவீதமாக குறைந்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை கூறியிருப்பதாவது, மே 10-ஆம் தேதி முதல் நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல குறைந்து வருகிறது.

நாள்தோறும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை விட கரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது. அந்த வகையில் நேற்று 2,95,955 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2.43 கோடியாக உள்ளது. 

கரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 9.54 சதவீதத்திலிருந்து இன்று 9.42 சதவீதமாகக் குறைந்துள்ளது. நேற்று சுமார் 40 நாள்களுக்குப் பின் நாட்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்திருந்தது. ஆனால் இன்று 2.08 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 4,157 பேர் கரோனாவுக்கு பலியாகினர்.

இன்று காலை நிலவரப்படி, கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 24.95 லட்சமாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.