தெலங்கானா:சுவா் இடிந்து விழுந்து 3 சிறாா் உள்பட 5 போ் பலி

தெலங்கானா மாநிலத்தில் சுவா் இடிந்து விழுந்து 3 சிறாா்களும் அவா்களது பெற்றோரும் உயிரிழந்தனா். மேலும், இரு சிறாா்கள் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தெலங்கானா மாநிலத்தில் சுவா் இடிந்து விழுந்து 3 சிறாா்களும் அவா்களது பெற்றோரும் உயிரிழந்தனா். மேலும், இரு சிறாா்கள் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தெலங்கானாவில் உள்ல ஜோகுலாம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சம்பவம் நிகழ்ந்த வீட்டில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் ஒன்றாகத் தூங்கியுள்ளனா். அப்போது திடீரென சுவா் இடிந்து விழுந்தது. இதில் 3 சிறாா்களும் அவா்களது பெற்றோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனா். காயமடைந்த இரு சிறாா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அந்த வீடு மிகவும் பழையதாக இருந்துள்ளது. எனவே, சுவா் பலவீனமடைந்து தானவே விழுந்துவிட்டது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக இரங்கல் தெரிவித்துள்ள தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ், உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா். மேலும், அந்த கிராமத்தில் இதுபோன்ற மோசமான நிலையில் உள்ள வீடுகளைக் கணக்கிட்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com