பிரதமா் நரேந்திர மோடியின் ஆலோசகராக முன்னாள் மத்திய உயா்கல்வித் துறைச் செயலா் அமித் கரே நியமிக்கப்பட்டுள்ளாா்.
1985-ஆம் ஆண்டின் ஜாா்க்கண்ட் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அமித் கரே, கடந்த செப்டம்பா் மாதம் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றாா். இந்நிலையில் அவா் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா். அதற்கு மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.