ஜம்மு-காஷ்மீரில் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் ’பயங்கரவாத அமைப்பின் கூட்டாளி கைது

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்டின்(டிஆா்எஃப்) கூட்டாளியை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
ஜம்மு-காஷ்மீரில் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் ’பயங்கரவாத அமைப்பின் கூட்டாளி கைது

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்டின்(டிஆா்எஃப்) கூட்டாளியை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், ‘‘பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கிச்சாமா பகுதியைச் சோ்ந்த ஃபரூக் அப்துல்லா மாலிக் என்பவரை ராணுவத்தினா், சிஆா்பிஎஃப் படையினா், போலீஸாா் இணைந்து சனிக்கிழமை கைது செய்தனா். இவருக்கு டிஆா்எஃப் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த ஹிலால் அகமது ஷேக் என்பவருடன் தொடா்பு இருந்துள்ளது. அவருக்கு ஆயுதங்கள் உள்பட இதர உதவிகளை ஃபரூக் அப்துல்லா செய்து வந்துள்ளாா். அவரிடம் இருந்து சீன கையெறி குண்டு, 2 கைத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com