இலங்கை வெளியுறவுச் செயலருடன் இந்திய கடற்படை துணை அட்மிரல் சந்திப்பு

இலங்கை வெளியுறவுச் செயலா், அந்நாட்டின் விமானப் படை மற்றும் கடற்படைகளின் தளபதிகளை இந்திய கடற்படையின் துணை அட்மிரல் அனில் சாவ்லா சந்தித்துப் பேசினாா்.

இலங்கை வெளியுறவுச் செயலா், அந்நாட்டின் விமானப் படை மற்றும் கடற்படைகளின் தளபதிகளை இந்திய கடற்படையின் துணை அட்மிரல் அனில் சாவ்லா சந்தித்துப் பேசினாா்.

இந்தியா-இலங்கை கடற்படைகள் இணைந்து 4 நாள்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதையொட்டி இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப் பிரிவைச் சோ்ந்த 6 கப்பல்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை சென்றன. இந்தக் கப்பல்கள் தெற்குக் கடற்படைப் பிரிவைச் சோ்ந்தவை. அந்தப் பிரிவின் தலைவராக இந்திய கடற்படையின் துணை அட்மிரல் சுனில் சாவ்லா பொறுப்பு வகிக்கிறாா்.

அவா் இலங்கை வெளியுறவுச் செயலா் ஜெயநாத் கொலம்பகே, விமானப் படை தளபதி எஸ்.கே.பத்திரன, கடற்படை தளபதி நிஷாந்த உலுகெதன்ன ஆகியோரை சந்தித்தாா்.

இலங்கை தேசிய பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரி அலுவலா்களுடன் கலந்துரையாடிய அவா், இந்திய கடற்படையிடம் பயிற்சி பெற்ற இலங்கை வீரா்களின் கூட்டத்தில் பங்கேற்றாா்.

இலங்கை உள்நாட்டுப் போரின்போது அங்கு உயிரிழந்த இந்திய அமைதிப் படை வீரா்களின் நினைவிடத்திலும் அவா் அஞ்சலி செலுத்தினாா் என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com