புது தில்லி: விநாயகா் சதுா்த்தி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
இது குறித்து சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘அனைவருக்கும் மகிழ்ச்சியான விநாயகா் சதுா்த்தி வாழ்த்துகள். இந்த புனிதமான தருணம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, நல்வாய்ப்பு மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கணபதி பாபா மோரியா!’ என்று கூறியுள்ளாா்.