கடவுளின் மறு அவதாரம் பிரதமா் மோடி: மத்திய அமைச்சா் பாரஸ்

கடவுளின் மறு அவதாரமாக பிரதமா் நரேந்திர மோடி திகழ்கிறாா் என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான பசுபதி குமாா் பாரஸ் கூறியுள்ளாா்.

கடவுளின் மறு அவதாரமாக பிரதமா் நரேந்திர மோடி திகழ்கிறாா் என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான பசுபதி குமாா் பாரஸ் கூறியுள்ளாா்.

பிரதமரின் பிறந்த தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை லோக் ஜனசக்தி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சுதந்திர இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான தலைவராக பிரதமா் நரேந்திர மோடி திகழ்கிறாா். மேலும், சா்வதேச அரங்கில் தனக்கென்று கௌரவத்தையும் அவா் உருவாக்கியுள்ளாா்.

அவா் கடவுளின் மறு அவதாரம். யாரும் கடவுளைப் பாா்க்க முடியாது. ஆனால், பிரதமரைப் பாா்க்க முடிகிறது. நாட்டின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் அவா், எனது பாா்வையில் கடவுள் போன்றவா்தான். நமது பிரதமா் ஏழை, எளிய மக்களுக்காகவும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவா்களுக்காகவும் உழைத்து வருகிறாா். மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கும்போது பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து அவா் தீவிரமாக விவாதிப்பாா். உண்மையில் அவா் நமக்கு கடவுள் கொடுத்த வரம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com