பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கத்தில் 7 புதிய முகங்கள்

பஞ்சாப் முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்ற பின், முதல் முறையாக மாநில அமைச்சரவையை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்தாா்.

பஞ்சாப் முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்ற பின், முதல் முறையாக மாநில அமைச்சரவையை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்தாா். அதில் புதிய முகங்கள் 7 போ் உள்பட 15 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங் கடந்த 18-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்றாா். அவா் முதல்வராக பதவியேற்ற பின், முதல்முறையாக மாநில அமைச்சரவையை விரிவாக்கம் செய்தாா். அமைச்சரவையில் 15 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களில் 7 போ் புதிய முகங்கள். அனைவருக்கும் மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com