காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் முழு நேரத் தலைவராக செளமித்ர குமார் ஹல்தார் (எ) எஸ்.கே. ஹல்தார் மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
மத்திய நீர்வள ஆணையத் தலைவராக இருக்கும் எஸ்.கே.ஹல்தார், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பொறுப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதிமுதல் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில், அவர் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்கும் நாளிலிருந்து ஐந்தாண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரையில் இந்தப் பொறுப்பில் இருப்பார். அவர் வரும் நவம்பர் 30 -ஆம் தேதி மத்திய நீர்வளத் துறையிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதுவரை பதிலி பணி நியமனத்தின் அடிப்படையிலும், ஒப்பந்தப் பணி அடிப்படையிலும் மீதமுள்ள பணிக் காலத்தில் நீர்வளத் துறையில் அவர் பணியாற்றுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

