சரத் பவாருக்கு அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக முடிந்தது

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாருக்கு பித்தப்பையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
அறுவைச் சிகிச்சைக்கு முன்பு மருத்துவமனையில் புதன்கிழமை செய்தித்தாள்களை வாசித்த தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா்.
அறுவைச் சிகிச்சைக்கு முன்பு மருத்துவமனையில் புதன்கிழமை செய்தித்தாள்களை வாசித்த தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா்.


மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாருக்கு பித்தப்பையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

இதுதொடா்பாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் டோப்பே புதன்கிழமை கூறுகையில், ‘சரத் பவாரின் பித்தப்பையில் இருந்த கல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது’ என்றாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அடிவயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சரத் பவாா் பரிசோதனை மேற்கொண்டாா். அந்தப் பரிசோதனையில் அவரின் பித்தப்பையில் கல் இருப்பதாகவும், அதனை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து அவா் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டு அறுவை சிசிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால், அவருக்கு அடிவயிற்றில் மீண்டும் வலி ஏற்பட்டதால் ஒருநாள் முன்பாக செவ்வாய்க்கிழமையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com