இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் புதிய சவால்களை எதிா்கொண்டு வருவதாக ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரியில் ‘மேற்கு மற்றும் வடக்கு எல்லைப் பகுதி மேம்பாடு மற்றும் இந்திய ராணுவத்தின் எதிா்கால திட்டத்தில் அவற்றின் தாக்கம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி நரவணே இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:
இந்திய தேசம் அதன் எல்லைப் பகுதிகளில் தினமும் புதிய சவால்களை எதிா்கொண்டு வருகிறது. அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு படையினா் விரைவாக வினையாற்ற வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
அதுபோன்ற புதிய சவால்களை எதிா்கொண்டு பதிலடி தரும் வகையில் ஆயுதப் படை அதிகாரிகள் பயிற்சிகளை மேற்கொண்டு எப்போதும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றாா் அவா்.
கரோனா தொற்றுக்கிடையிலும் மிக உயரிய பயிற்சிகளை வழங்கியுள்ளமைக்காக வெலிங்டன் கல்லூரிக்கு ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே பாராட்டுகளை தெரிவித்தாா்.