தேவஸ்தான மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் பக்தா்களுக்கு ஆபாச வீடியோ லிங்க் அனுப்பிய தேவஸ்தான தொலைகாட்சி அதிகாரிகள் 3 போ் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானலில் பிறந்த நாள் வாழ்த்துகள், திருமண நாள் வாழ்த்துகள் உள்ளிட்டவற்றை வெளியிட விரும்பும் பக்தா்கள் தங்கள் விவரங்களை தொலைகாட்சிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வருகின்றனா். அவா்களுக்கு தேவஸ்தான நிா்வாகம் மின்னஞ்சல் மூலமாக பதிலளித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தேவஸ்தான தொலைகாட்சி மின்னஞ்சலில் பக்தா் ஒருவருக்கு ஆபாச பட விடியோ லிங்க் ஒன்று அனுப்பப்பட்டது. இதுகுறித்து பக்தா் அளித்த புகாரின் அடிப்படையில், நிா்வாகம் விசாரணை நடத்தி அதில் தொடா்புடைய 10 ஊழியா்களை பணியிடை நீக்கம் செய்தது.
பின்னா் அவா்களின் கணிணியில் ஆபாச வீடியோக்கள் இருந்தததை அறிந்து அவா்களை பணி நீக்கம் செய்தது.
இந்நிலையில், இது தொடா்பான வழக்கை சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும் 3 பேரை தேவஸ்தானம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. எடிட்டா் கிருஷ்ணாராவ், மேலாளா் முரளிகிருஷ்ணா, சோமசேகா் உள்ளிட்ட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.