திருமலையில் 51,958 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையான் திருக்கோயிலில் திங்கட்கிழமை முழுவதும் 51,958 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 26,255 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலை ஏழுமலையான் திருக்கோயிலில் திங்கட்கிழமை முழுவதும் 51,958 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 26,255 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

நாள்தோறும் ஏழுமலையான தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். இந்நிலையில், ஆன்லைன் மூலம் 25,000 விரைவு தரிசன டிக்கெட், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் 15,000 உள்ளிட்டவை பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2, 000 பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1, 000 என தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் நடைபாதை வழியாகவும், மதியம் 1 மணிக்கு பின்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை வழி காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை வழி காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

கொவைட் விதிமுறையாக திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக் கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com