நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாளை (ஏப்.9) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
கரோனா மீண்டும் பரவி வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
தில்லியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறையின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.