ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் காயமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா பகுதியில் தனது வீட்டின் வெளியே இருந்த ராணுவவீரரை பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் அந்த ராணுவ வீரர் காயமடைந்தார்.
உடனடியாக காயமடைந்த ராணுவ வீரர் சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.